ஏது இல்லை, எனினும்….

ஏது எதுவுமில்லை!
இறை மொழி: யோவான் 15:25.

25. முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.

இறைவழி:
சூது என்பதை அறிவாய் நினைத்து,
சூழ்ச்சி செய்தல் அறமில்லை.
ஏது இல்லை, எனினும் இணைத்து,
எதிரி ஆக்குதல் அறமில்லை.
வாது செய்வதாய் தீதைப் பிணைத்து,
வாழ்வழித்தல் அறமில்லை.
தூது தருகிற இறையை அணைத்து,
துயர் போக்குல், அறமாகும்!  

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.