சான்று!
இறை மொழி: யோவான் 15:26-27.
26. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.
27. நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
இறை வழி:
இறைவனின் சான்றாய் இந்நிலம் வந்த
இயேசுவின் சான்று, ஆவியரே.
முறை அறியாமல் கூட்டிக்கழிக்கிற,
முதிரா நாமோ, பாவியரே.
திரை மறைவிருக்கும் தெய்வம் தந்த
தெளிந்த சான்று ஆவியரே.
சிறை விட்டகன்று, கறையுமழிக்கிற,
செஞ்சான்றாவோம், பாவியரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.