இருளா? ஒளியா?

இருளா? ஒளியா? 

இறை வாக்கு: யோவான் 12:34-35.

இறை வாழ்வு:

இருளா? ஒளியா? என்று கேட்டால்,

இருள் வேண்டாம் என உரைப்பரும்,

அருளா? பொருளா? என்று கேட்டால்,

அறியாதவராய் முறைக்கிறார்! 

பொருள் தேடுலகில் புறம்பே சொல்லும்,

பொய் நிறை வாக்கு இறைப்பரும்,

மருளகலாத மனதின் இருளால்,  

மறைக்கு எதிராய்க் குரைக்கிறார்!


ஆமென். 


கெர்சோம் செல்லையா.