அன்பு!

அன்பு!

இறைவாக்கு: யோவான் 14:21.

  1. என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

இறை வாழ்வு:

விரும்பும் இறையின் விருப்பம் என்ன?
விண் மகன் வாக்கு கற்போமா?
திரும்பும் நெஞ்சின் தீர்ப்பும் என்ன?
தெய்வத்துடனே நிற்போமா?
துரும்பும் கூட துணையாய் உதவ,
தெரிந்திருப்பதை அறிவோமா?
அரும்பும் மொட்டு அழகாய் மலர,
அன்பை நாமும் தெரிவோமா?

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.