தந்தையும் மைந்தனும்!

தந்தையும் மைந்தனும்!

இறை வாக்கு: யோவான் 14: 19-20.

  1. இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.
  2. நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.

இறை வாழ்வு:

அங்கு போனால் ஆசிகள் பெருகும்;
அதனால் சென்றேன் என்றவரே,
எங்கு போயினும் எல்லாம் கருகும்;
என்றுமிருப்பது திருவன்பே.
இங்கு இதனை எமக்கு அருளும்,
இறை எங்கென்று சொன்னவரே,
தங்க மைந்தன் இயேசுவின் உருவம்,
தந்தைக்குரிய அருளன்பே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.