ஒன்றிலிருந்து!

ஒன்றிலிருந்து தொடங்குவீர் !

இறை வாக்கு: யோவான் 14:22.

  1. ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்.

இறை வாழ்வு:

ஓரொளிக் கதிர் ஆடியில் விழுந்தால்
ஊரின் இருள் மறைந்துபோகும்.
பேரொளியுள்ள ஒருசிலர் எழுந்தால்
பிறரது வாழ்வும் சிறந்ததாகும்.
யாரொளி வீசத் துணிவாரென்றால்,
இறையின் ஆவி உடையோராகும்.
நீரிதை உணர்ந்து பணிவீரென்றால்,
நிலை வாழ்வுறுதி அடைவீராகும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.