அன்பே இறைவன்!

அன்பே இறைவன்!


கொல்லவும், அழிக்கவும் ஒருவன் வந்தால்,

கோனாய், இறையாய்ப்  பாராதீர்.

வெல்லவும், வீழ்த்தவும், சூது புனைந்தால், 

விரும்பும் அறமாய்க் கூறாதீர்.

சொல்லவும் செய்யவும் பழியும் தந்தால்,

சொல்கிற அவன்பின் சேராதீர். 

எல்லையும், முடிவும் இல்லான் ஒருவன்;

இவனன்பு விட்டு மாறாதீர்!


-செல்லையா.