அச்சம்!

இறைவாக்கு: யோவான் 9:22-23.

இறை வாழ்வு:


பற்று இல்லா நெஞ்சம் எங்கும், 

பரவிக் கிடக்கும் அச்சம்.

சற்று நேரம் ஆய்ந்திட நீங்கும்.

சரி செய்யாவிடில் எச்சம்.

உற்று நோக்கி, தெய்வம் பாரும்;

உள்ளில் வருமே துணிவும்.

பெற்று வாழ்வார் கூட்டில் சேரும்;

பேரச்சமும் பணியும்! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.