என் மொழி!

என் மொழிக் கொள்கை!

பன் மொழி பேசும் என் பழ நாட்டில்,

தன் மொழி உயர்ந்தது என்றுரைப்பார்

இன் மொழி அறியாதிருப்பதானால்,

நன் மொழி கேட்டு, பிழைக்கப் பார்.


எம்மொழி கேட்கையில், அம்மொழி வெறுப்பில்,

தம் மொழி வளர்க்க மறப்பதானால்,

செம்மொழி தமிழில் இம்மொழி சொல்வேன்;

உம் மொழி தழைக்க, உழைக்கப் பார்!


-கெர்சோம் செல்லையா.