கள்ள கிறித்துகள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா  21:7-8.  

7   அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.

8   அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

முள்ளும் மலரும் ஒன்றல்ல;  

முளைக்கும் இடமோ வேறல்ல.    

துள்ளும் கயமை ஊழியரை,  

தூதர் ஆக்குதுதல் பேறல்ல.  

கள்ள கிறித்துகள் பெருகிடவே,  

கடவுளின் அரசு வருந்திடுதே.  

உள்ளம் உடைந்து எழுதுகிறேன்;  

உண்மை காணத் திரும்பிடுமே!  

ஆமென்.

Leave a Reply