வாக்கே வாழும்!

கோயில் போகும், வாக்கோ நிலைக்கும்!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 21:5-6.

5   பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப் பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,

6   அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

கல்லால் கட்டிய கோயிலும் அழியும்;  

காணும் அழகும் அதனுடன் ஒழியும்.  

சொல்லாம் தெய்வ வாக்கில் விழியும்;  

சொற்படி நடக்க, நெஞ்சும் தெளியும்.

எல்லாம் தெரிந்த சாலொமன் அன்று,  

எழுதிய நூலால் பயனே இன்று.  

நல்லார் தொழுத கோயில் எங்கு?  

நமக்குத் தேவை நல்வாக்கிங்கு!  

ஆமென்.

Leave a Reply