நஞ்சின் நாள்!

நஞ்சுடையும் நாள் வருமுன்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:9-11.  

9   யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.

10  அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.

11  பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.  

கிறித்துவில் வாழ்வு:  

நெஞ்சதிர, நிலம் அதிர,  

நெடும்போரின் முரசதிர,  

வஞ்சகரின் வெறிச் செயல்கள் 

வானதிர முழங்கிடுதே.  

பஞ்சத்தினால் பசிச்சாவும்,  

பாழ் நோயும் பரவிவர,

நஞ்சுடையும் நாள் வருமுன்,  

நல்மீட்பு வழங்கிடுமே!  

ஆமென்.

Leave a Reply