தன்னைக் கெடுத்து…..

தன்னைக் கெடுத்து யாவும் பெறுதல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:25.

25மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

கிறித்துவில் வாழ்வு:
ஊரை மடக்கி, உலையில் போட்டும்,
உண்ண ஒருசிறு பருக்கையில்லை.
பாரை அளந்து, பக்கம் வைத்தும்,
பாங்காய் அமரவும் இருக்கையில்லை.
வேரை வெட்டி, மரத்தினை நாட்டும்,
வீண் செயலெல்லாம் வளர்ச்சியில்லை. 
தேரை உண்ணும் பாறைக்குள்ளும்,
தெய்வம் தரவே, தளர்ச்சியில்லை! 
ஆமென்.

Leave a Reply