இளைஞனே எழுந்திரு!

இளைஞனே எழுந்திரு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:11-15.
11 மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
12 அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
13 கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
14 கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
15 மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.

கிறித்துவில் வாழ்வு:
எண்ணில் அடங்கா இளவயதோர்,
இன்றும் இறந்து கிடக்கின்றார்.
பண்ணும் செயலின் விளைவறியார்,
பாவம் விரும்பி நடக்கின்றார்.
மண்ணே வாழ்வு என மயங்கும்,
மக்கள் தெளியத் தொட்டருளும்.
விண்ணே இரங்கும், விளிக்கின்றேன்.
விரைந்து இவரை மீட்டருளும்!
ஆமென்.

Image may contain: 1 person, outdoor and text
LikeShow More Reactions

Comment

Leave a Reply