வேறு அடையாளம் வேண்டுமா?
நற்செய்தி மாலை: மாற்கு 8:10-13.
“உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார். பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். அவர் பெருமூச்சுவிட்டு, ‘ இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.”
நற்செய்தி மலர்:
விண்ணில் வேறோர் அடையாளம்,
வேண்டிக் கேட்கும் நண்பர்களே,
கண்ணில் காணும் காட்சிகளும்
கடவுள் உண்டெனும் சான்றுகளே!
மண்ணும் விண்ணும் சான்றுரைத்தும்,
மதிநூல் வாக்கது போன்றுரைத்தும்,
எண்ணிப் பார்க்க நீர் விரும்பலையே!
இனிமேல் எதற்கு அடையாளமே?
ஆமென்.