விடுதலை நாள் வாழ்த்து!
அரசியல், சமுக வீழ்ச்சிகளால்,
அடிமை ஆனோம் அன்னாளில்.
இரக்கம் இல்லா ஆட்சிகளால்,
ஏற்றமும் காணோம் இன்னாளில்.
முரடர், திருடர் நீக்கிவைத்தால்,
முன்னேறிடுவோம் பின்னாளில்.
உரக்கக் கூறியும் போக்குரைத்தால்,
உமக்கு விடுதலை என்னாளில்?
-கெர்சோம் செல்லையா.
