மரியின் அச்சம்!

மரியின் அச்சம்!
கிறித்துவின் வாக்கு:லூக்கா1:30.

30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.

கிறித்துவில் வாழ்வு:
கன்னி ஒருத்தி கருவுற்றாள் எனில்,
காண்போர் பழிக்கும் காலமது.
அன்னை மரியும் அதனை நினைத்து,
அச்சம் கொள்வதில் தவறேது?
என்றபோதிலும் இறைவிருப்பிற்கு,
ஈந்தளித்தல் காணும்போது,
முன்பு நிற்கத் தகுதியில்லை;
என்றுணர்ந்தேன், உண்மையேயிது!
ஆமென்.

Image may contain: 1 person

Leave a Reply