வழி வந்தழைத்தும்….

வழி வந்தழைத்தும் வராதவர்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:51-53.
51 பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி,
52 தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
53 அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

கிறித்துவில் வாழ்வு:
எளியரை உயர்த்தும் எண்ணத்தோடு,
இறைமகன் வந்தும் ஏற்கவில்லை.
வழியறியாமல் வதங்குவாரிடத்து,
வழி வந்தழைத்தும் பார்க்கவில்லை.
தெளிவில் வறுமை இருக்கும்போது,
தெய்வ அருளும் சேர்ப்பதில்லை.
விழி திறப்பவராய் ஆவியர் வருவார்;
விண் வாக்கென்றும் தோற்பதில்லை.
ஆமென்.

Leave a Reply