வரலாறு!

பழங்கதையல்ல, வரலாறு!


பாட்டியின் பாட்டி யாரெனக் கேட்டால்,

பழங்கதை என்று சொல்வோரே,

போட்டியில் நாளை பேரரின் பேரர்,

பொருந்தா உம் பெயர் சொல்லாரே!

நாட்டினை அறிய நடந்தது அறிவீர்;

நன்மை இதுவெனச் சொல்வாரே.

கேட்டினை நீக்க, ஆய்வுகள் செய்து,

கீழடிப் பெருமை சொல்வீரே.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply