வேண்டாம் கொலைவெறி!

அழித்தல் பழித்தல் வேண்டாமே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:54-56.

54அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
56மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பழித்திடும் மாந்தர் செயல் கண்டு,
பகைத்திடும் பண்பு எனில் வந்தால், 
அழித்திடும் அவ்வகைப் பண்புகளை;
அன்பில் வளர எனக்கிரங்கும்.
கொழித்திடும் தீயோர் நிலைகண்டு,
கொடுமை செய்ய நானினைந்தால்,
மழித்திடும் பேயின் இருப்பிடத்தை;
மன்னிப்பருளி எனிலிறங்கும்!
ஆமென்.

Leave a Reply