மருத்துவர்!
நற்செய்தி: யோவான் 6:1-2.
நல்வழி:
அணியாய் மருத்துவர் பெருகக் கண்டு,
அகம் மகிழார் யார் உண்டு?
பிணியால் வாடும் மக்கள் முன்பு,
பேசும் இவர்தான் இறையன்பு.
பணியாய்ச் செய்யும் மருத்துவ நெஞ்சு,
பரிவில் வளர நிதம் கெஞ்சு.
கனிவாய்த் தொட்டு, காயம் கட்டு.
கடவுள் அருளை நீ கூட்டு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.