மகனை அனுப்பிய தந்தை.
நற்செய்தி மாலை: மாற்கு 12:6-8.
“இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன், தம்மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார். அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், ‘ இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும் ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.”
நற்செய்தி மலர்:
தந்தை மகனை அனுப்பி வைத்தார்;
தவற்றைத் திருத்தும் வழிவகுத்தார்.
நிந்தை செய்தோர் இதை மறந்தார்;
நேர்மைவிட்டு குருசிலறைந்தார்.
மைந்தனேசோ உயிர்த்தெழுந்தார்;
மன்னிப்பருளி, மீட்பும் தந்தார்.
இந்த நிகழ்வை முன்னறிவித்தார்.
யாவரும் மீள இன்றும் உரைத்தார்!
ஆமென்.
![No automatic alt text available.](https://fb-s-d-a.akamaihd.net/h-ak-xpf1/v/t1.0-0/s526x395/15095040_1283604528337013_5301730100566274728_n.jpg?oh=fdd5aa63a9c470ef894dfec853939e46&oe=58B5EAD8&__gda__=1488440692_220e14283b8c8347a3ceae8cf184817b)