புறக்கணிக்கப் பட்டவர் ஒருநாள்…

புறக்கணிக்கப் பட்டவர் ஒருநாள்…
நற்செய்தி மாலை: மாற்கு 12:9-12.
“திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார். ‘ கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று ‘ என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா? ‘ என்று அவர் கேட்டார். தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.”
நற்செய்தி மலர்:
புறக்கணிக்கப் பட்டவர் ஒருநாள்,
புரியா உயர்வைத் தாண்டிடுவார்.
பொறுமையோடு இறையைப் பார்த்தால்
புவியில் அவருடன் ஆண்டிடுவார்.
மறைக்கப்பட்ட வரலாற்றைத்தான்,
மனிதர் இனிமேல் தோண்டிடுவார்.
அறையப்பட்டும் உயிர்த்தார் ஒருவர்;
அவர்போல் எழும்ப வேண்டுடிவார்!
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply