திருந்தார் ஒருநாள் உருகிடுவார்!

திருந்தார் ஒருநாள் உருகிடுவார்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:4-5.
“மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள். அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.”
நற்செய்தி மலர்;
அடிப்பார், உதைப்பார், அகந்தையில் நடப்பார்;
அடுத்தவர் உரிமையை மறுத்திடுவார்.
இடிப்பார், இகழ்வார், இடுக்கண் கொடுப்பார்;
எழை எளியரை வெறுத்திடுவார்.
வெடிப்பார், தகர்ப்பார், வெட்டியும் கொல்வார்,
வீணர் நாட்டில் பெருகுகிறார்.
துடிப்பார், துவள்வார், துயரில் அமிழ்வார்,
திருந்தார் ஒருநாள் உருகிடுவார்!
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply