பெயரைப் பார்ப்போம்!
இறைவாக்கு: லூக்கா 2 :21
21 பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
இறைவாழ்வு:
பெயரில் என்னப் பெருமை என்று
பேசும் மக்கள் சிலருண்டு.
துயரில் இதனால் மீட்பை இழந்து
துடித்துப் போவோர் பலருண்டு.
உயரம் தாண்ட அறியார் இவர்க்கு,
உண்மை என்னப் புரியவில்லை.
முயலும் முன்னே அறியும் இறையின்
பெயரே மீட்பு, வேறில்லை!
ஆமென்.
![No automatic alt text available.](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/33145783_1838708339493293_4797191595881398272_n.jpg?_nc_cat=0&oh=9a5c7abf64e04278026c5c725b43ddd4&oe=5B9540B0)