பார்ப்போம் இறையை நன்றேயாம்!
கிறித்துவின் வாக்கு:லூக்கா 1 :10
“தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.”
கிறித்துவில் வாழ்வு:
விழுதுகள் வேறாய்த் தெரிந்தாலும்,
வேர்மேல் மரமோ ஒன்றேயாம்.
தொழுதிடும் முறைகள் விரிந்தாலும்,
தொழப்படும் இறையோ ஒன்றேயாம்.
கழுவிடும் சடங்கென எரிந்தாலும்,
கடவுளின் வழியோ ஒன்றேயாம்.
பழுதுள்ளவராய்த் திரிந்தாலும்,
பார்ப்போம் இறையை நன்றேயாம்!
ஆமென்.
![Image may contain: tree, plant, outdoor and nature](https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p280x280/19665320_1512738168756980_7222909261723324566_n.jpg?oh=37edac9c1e9835d5a216c326acb5785e&oe=59DAC548)