இணைக்கும் பாலம்!

இணைக்கும் பாலம்!
கிறித்துவின் வாக்கு: மாற்கு 1:8-9.
“அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.”

கிறித்துவில் வாழ்வு:
இணைக்கும் பாலமே பாதிரியாவார்;
இறையுடன் இணைக்க, மாதிரியாவார்.
அணைக்கும் இறையின் பண்பாயிருப்பார்;
அனைவரிடத்திலும் அன்பாயிருப்பார்.
பிணைக்கும் பணியில் பிழைகள் பொறுப்பார்.
பெரியவர் சிறியவர் பிரிவினை வெறுப்பார்.
நினைக்கும் யாவரும் இவரைப் புகழ்வார்;
நேர்வழி விரும்பாதவரே இகழ்வார்!
ஆமென்.

Image may contain: bridge, plant and outdoor

Leave a Reply