பார்க்கின்றார்!

பார்க்கின்றார்!

நற்செய்தி: யோவான் 4:46-50.46.

பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.47. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.48. அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.49. அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.50. இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்.

நல்வழி:

பற்றறிவோடும் பார்க்கின்றார்;

பட்டறிவோடும் பார்க்கின்றார்.

சிற்றறிவோடும் பார்க்கின்றார்;

சிறப்பறிவோடும் பார்க்கின்றார்

உற்றவராகியும் பார்க்கின்றார்.

உணராதவரும் பார்க்கின்றார்.

எற்றிசையாரும் பார்க்கின்றார்.

ஏசுவில் அதிசயம் பார்க்கின்றார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply