இரக்கமற்றோர்!


இரக்கம் உருக்கம் இல்லாதாரே,

இங்கே தலைவர் ஆகின்றார். 

அரக்கர் அரக்கி என்கின்றாரே;

அவரால் எளியர் சாகின்றார்.

உறக்கம் ஓய்வு உண்ணாதாரே, 

உழவர் வடிவில்  நோகின்றார்.

மறக்கும் மக்கள் மதி கெட்டாரே;

மடையர்  அழியப் போகின்றார்!


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply