பதற்றத்தில் பேசாதீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:48-49.
“அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘ அது பேய் ‘ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.”
நற்செய்தி மலர்:
ஆழ் கடலில் நடந்திடவும்,
ஆண்டவர்க்குத் தெரியும்.
அறியாத மானிடர்க்கோ,
அதுமாறிப் புரியும்.
பாழ் உலகில் அதிசயங்கள் ![](https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=936ee8fe82&view=fimg&th=1536ea23a87e0d42&attid=0.1&disp=emb&realattid=ii_ilq69bdc0_1536ea1e01f1f993&attbid=ANGjdJ8LeJ1-Tboc0Y3LFiMvtSfPDmoyqPfOWNNjhkyCOXweWBdW5_rHenwRKvsVk3ZpTdyOzWZjTatum4lcHcqkFR5z1uSWIDonOgDwNXTqVq7Xb3hWaDbkJkzgheM&sz=w558-h362&ats=1457850062300&rm=1536ea23a87e0d42&zw&atsh=1)
படைத்தவரின் மிச்சம்.
பதற்றத்தில் பேசாதீர்;
பரவி விடும் அச்சம்!
ஆமென்.