நெஞ்சில் என்னை அவிக்கின்றேன்!

நெஞ்சில் எனையே அவிக்கின்றேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:23-24.
3 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

கிறித்துவில் வாழ்வு:
எனக்கென வந்தச் சிலுவையினை,
எடுத்து நன்மை செய்தேனா?
தனக்கென வாழ்ந்துத் தேய்ந்ததினால்,
தடுமாறும் நான் உய்வேனா?
மனக் கணக்கிட்டுப் பார்க்கின்றேன்;
மன்னிப்பிற்காய்த் தவிக்கின்றேன்.
நினைக்கவே வெட்கம் மூடுவதால்,
நெஞ்சில் எனையே அவிக்கின்றேன்!
ஆமென்.

Leave a Reply