நாளை நடப்பதை நாமறியோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:22. |
22மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார். கிறித்துவில் வாழ்வு: நாளை நடப்பதை நாமறியோம். நடப்பதுங்கூடத் தானறியோம். வேளை வருவதை அறிந்தவராய், விண்ணின் கோனோ முன்னுரைத்தார். வாளை நம்பி விழுபவரோ, வலிமையாகப் படை சேர்ப்பார். ஆளை மீட்க வந்தவரோ, அப்படியின்றி, அன்புரைத்தார்! ஆமென். |