நல்ல நிலமாவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:15.
15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
பாதை, பாறை, முள்ளாயிருந்தேன்;
பயனற்றவனாய்ப் பாழாய்த் திரிந்தேன்.
தீதை நம்பித் தீமைச் செய்தேன்;
தீங்கைத்தானே திரும்பக் கொய்தேன்.
பேதை நானும் இறைமுன் வந்தேன்;
பிழைகள் திருத்தப் பயனும் தந்தேன்.
தூதை ஏற்றுத் துயரும் பொறுத்தேன்;
தூயோன் அருளால் விளைச்சல் அறுத்தேன்.
ஆமென்.
![Image may contain: sky, grass, outdoor and nature](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/51562078_2213459472018176_4765393663771541504_n.jpg?_nc_cat=109&_nc_oc=AQkNd98xrFRswb6ZD8XuQvygBGstF8gl6lNVoSd7hizFS2IS-HkJVtVv6PmmkdYOg40&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=1fa22292362fbb94e3e2eb6b3c178a46&oe=5CF07477)