நல்ல நிலமாவோம்!

நல்ல நிலமாவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:15.
15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பாதை, பாறை, முள்ளாயிருந்தேன்;
பயனற்றவனாய்ப் பாழாய்த் திரிந்தேன்.
தீதை நம்பித் தீமைச் செய்தேன்;
தீங்கைத்தானே திரும்பக் கொய்தேன்.
பேதை நானும் இறைமுன் வந்தேன்;
பிழைகள் திருத்தப் பயனும் தந்தேன்.
தூதை ஏற்றுத் துயரும் பொறுத்தேன்;
தூயோன் அருளால் விளைச்சல் அறுத்தேன்.
ஆமென்.

Image may contain: sky, grass, outdoor and nature

Leave a Reply