நல்லவரேசு எனது கோனார்!
உண்மையுள்ள நண்பன் வேண்டும்,
உயிராயிருந்து ஒளியைத் தூண்டும்.
எண்ணி நானும் தேடிச் சென்றேன்;
எவருமில்லை, வாடி நின்றேன்.
கண்ணில் பாயும் ஆறு கண்டார்;
கடவுள் இரங்கி, ஆட்கொண்டார்.
நண்பனாகி இலக்கணம் ஆனார்;
நல்லவரேசு எனது கோனார்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: text and nature](https://fb-s-b-a.akamaihd.net/h-ak-fbx/v/t1.0-0/p526x296/20621969_1549389051758558_3699166475219645506_n.jpg?oh=63a2eba2b638f5d87b57606a74e80f71&oe=59F2194E&__gda__=1508814304_f87de7c368491e6e694698b6bfe413c0)