தூய்மை?

தூய்மை?

நற்செய்தி: 3:24-26.


24. அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.
25. அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக் குறித்துவாக்குவாதமுண்டாயிற்று.
26. அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.


நல்வழி:


நீரால், நெருப்பால், நிலையாப் பொருளால்,

நினைப்போர் பெறலாம் புறத் தூய்மை.

ஊரால், உறவால், ஓங்கும் அரசால்,

உலகும் பெறலாம் புறத் தூய்மை.

யாரால் கிடைக்கும், எங்கே கிடைக்கும்,

எப்படி கிடைக்கும் அகத் தூய்மை?

சீராய் மாற்றும் சிறுமை அகற்றும்,

சிலுவை ஈவதே அகத் தூய்மை!


ஆமென்.


-செல்லையா.

Leave a Reply