தூசும் எதிராய்ச் சான்றுரைக்கும்!

தூசும் எதிராய்ச் சான்றுரைக்கும்!
நற்செய்தி மாலை: மாற்கு 11:15-17.
“அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை.” என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் ‘ என்று மறைநூலில் எழுதியுள்ளது ″ என்று அவர்களுக்குக் கற்பித்தார்; ‘ ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
காசு பணம் வாங்கா மீட்பை,
கடவுள் பெயரால் அறிவித்தோம்.
பேசுகின்ற சொல்லின் எடைக்கு,
பெருந்தொகையைக் குறிவைத்தோம்.
மாசு மருவில்லா இயேசை,
மண், பொன் வாங்க மறுதலித்தோம்;
தூசும் எதிராய்ச் சான்றுரைக்கும்,
திருந்தாவிடில் அறுபடுவோம்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

Leave a Reply