உண்மையன்பால் அழகூட்டுமே!

உண்மையன்பால் அழகூட்டுமே!

சமயம் என்பது, சாயம் மட்டுமே.
சடங்கு செய்கிறார், அதைக் காட்டவே.
இமயம் போன்றது, இவரின் தீட்டுமே;
இதை மறைக்கவே, ஆர்ப்பாட்டமே!

அமைதி என்பது இறையில் மட்டுமே.
அன்பு உருவமே அதைக் காட்டுமே.
உமைப் படைத்ததும் அவர் திட்டமே.
உண்மையன்பால் அழகூட்டுமே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: beard and one or more people

Leave a Reply