கயமை வளர்த்தவே கல்வியா?

கயமை வளர்த்தவே கல்வியா?
நற்செய்தி மாலை: மாற்கு 11:18-19.
“தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள். மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள்.”
நற்செய்தி மலர்:
கயமை வளர்ப்பவர் யார் என்றேன்?
கற்றவர் பெயரைத்தான் சொன்னார்!
கற்ற கல்வி எதுயென்றேன்?
கல்வியும் கொள்ளைதான் என்றார்!
இயங்கும் அமைப்பே தப்பென்றால்,
எப்படி நன்மை வரும் என்றேன்?
எல்லாம் நன்மையாக்குபவர்,
இறைவன் நம்முள்தான் என்றார்!
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply