தனிமை வேண்டல்!

தனித்தும் கேட்போம்!
நற்செய்தி மாலை : மாற்கு: 6:45-47.
“இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார்.”
நற்செய்தி மலர்:
இருவர் மூவர் இணைந்து வேண்ட,
இறைவன் அங்கே வந்திடுவார்.
ஒருவர் தனித்து வேண்டினாலும்,
உள்ளில் அமர்ந்து தந்திடுவார்.
திருடர் வருதல் போல இயேசு
தெரியா நேரம் இறங்கிடுவார்.
அருளர் அணியில் நாமும் சேர,
அவரைக் கேட்போம், இரங்கிடுவார்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

Leave a Reply