சுண்டு விரலால்!

சுண்டு விரலாலே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:18-20.

18சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.
19நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.
20

நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

கிறித்துவில் வாழ்வு:
தொண்டு செய்வோர் அழுவது பாரும்;
தீமையை அகற்றித் தேற்றிவிடும்.
சுண்டு விரலே உமக்குப் போதும்;
சுடரொளி பரவிட ஏற்றிவிடும்.
கண்டு புகழும் கண்ணைத் தாரும்;
கடவுளின் அரசால் ஆற்றிவிடும்.
கொண்டு ஒழுகுவேன் அன்பாகட்டும்;
கிறித்துவே உமைப்போல் மாற்றிவிடும்!
ஆமென்.

Leave a Reply