ஒற்றுமை!

வேண்டாம் பிரிவினை!கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:16-17.

16வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
17அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம்.

கிறித்துவில் வாழ்வு:
ஒற்றுமையில்லா நாட்டினர் என்றும் 
ஓங்கிச் செழிக்க இயலாது.
குற்றங்கள்கூறி குதறி எடுக்கும்,
குடும்பமும் ஊரில் உயராது.
மற்றவருணர்வை மதிக்க மறுக்கும்,
மனிதமும் மாண்பு அடையாது.
உற்றுப் பார்த்து, உள்ளங் கழுவின்,
ஒருமனதிற்குத் தடை ஏது?
ஆமென்.

Leave a Reply