காக்கும் கடவுள்!

காக்கும்கடவுள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:21-23.

21 ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும்.
22 அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
23 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.

கிறித்துவில் வாழ்வு:
தீங்கு செய்யும் நோக்கங் கொண்டு 
திருடன் அலகை அலைகின்றான்,
ஆங்கு அவனது வலிமை முன்பு,
அடிமையோ நிலை குலைகின்றான்.
ஏங்கி நிற்கும் ஏழையர் கண்டு,
இரங்க மறுப்பான் தொலைகின்றான்.
தூங்கி வழிவான் இறைவன் ஆகான்;
தாங்கி மீட்பதே தலையென்பான்!
ஆமென்.

Leave a Reply