கயமை வளர்த்தவே கல்வியா?
நற்செய்தி மாலை: மாற்கு 11:18-19.
“தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள். மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள்.”
நற்செய்தி மலர்:
கயமை வளர்ப்பவர் யார் என்றேன்?
கற்றவர் பெயரைத்தான் சொன்னார்!
கற்ற கல்வி எதுயென்றேன்?
கல்வியும் கொள்ளைதான் என்றார்!
இயங்கும் அமைப்பே தப்பென்றால்,
எப்படி நன்மை வரும் என்றேன்?
எல்லாம் நன்மையாக்குபவர்,
இறைவன் நம்முள்தான் என்றார்!
ஆமென்.
