உணர்ச்சிப் பெருக்கில்….
நற்செய்தி மாலை: மாற்கு
“அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.51 இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள்.52 ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.”
நற்செய்தி மலர்:
உணர்ச்சிப் பெருக்கில் ஆடுவார்கள்;
உதவி கேட்டால் ஓடுவார்கள்.
மணலால் கட்டிய வீடு இவர்கள்;
மறுபடி மீண்டும் கூடுவார்கள்!
தணலாய் எரிக்கும் ஆவி அவர்கள்
தன்மை மாற்றத் தேடுவார்கள்.
சணலால் நெய்த ஆடையிழந்து,
சாகா மீட்புடை உடுப்பார்கள்!
ஆமென்.
![Image may contain: hat](https://scontent-mrs1-1.xx.fbcdn.net/v/t1.0-9/17353439_1405088512855280_2216470639189790396_n.jpg?oh=47a05645ad725b6106ff7d6c4e070110&oe=5969F924)