உரைப்படி இயேசு முடிக்கின்றார்!

உரைப்படி இயேசு முடிக்கின்றார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14;47-49.
” அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து, ‘ கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும் ‘ என்றார்.”

நற்செய்தி மலர்:
அழைத்தால் வந்திடும் ஆண்டவரை,
ஆயுதம் கொண்டு பிடிக்கின்றார்.
தழைத்தார் அரசின் படையினரும்,
தவறாய் நேர்மையை அடிக்கின்றார்.
பிழைத்தார் இவர்மேல் சினமுற்று,
பேதுரு அடியார் துடிக்கின்றார்.
உழைப்பார் அறிந்து அமைதிபெற,
உரைத்தார் இயேசு, முடிக்கின்றார்!
ஆமென்.

Image may contain: cloud, sky, tree, outdoor and nature

Leave a Reply