இறைவிருப்பு!

இறைவிருப்பு! கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:39-42. 39 பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள்.40 அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி,41 அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

கிறித்துவில் வாழ்வு:

வன்முறை போற்றி, வாளெடுத்தால்,

வாழ்வு கிடைக்கும் என்பவனே,

உன்முறை ஒட்டி, ஊர் நடந்தால்,

உயிரோடிருப்பவர் யார் மகனே?

தன்முறை அப்படி அல்ல என்று,

தாழும் இயேசுவைப் பார்ப்பவனே,

நன்முறை என்பது இறை விருப்பாகும்,

நம்பி இயேசுவைச் சேர் மகனே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply