ஆயுதம் எடாதீர்! கிறித்துவின் வாக்கு : லூக்கா 22: 35-38. 35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.37 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

கொடியோன் என்னும் குற்றச்சாட்டை,

கிறித்துவும் நமக்கென எற்றாரே.

அடியார் கைகளில் ஆயுதமிருக்க,

அதனால் அப்பெயர் பெற்றாரே.

விடியா வாழ்வை விரைவுபடுத்த,

வீணாம் வன்முறை நாடாதீர்.

பொடியாய்ப்போனோர் பலபேருண்டு;

புரிந்து ஆயுதம் எடாதீர்!ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply