வேர்வையும் மாறிற்றே!

வேர்வை குருதியாகும்படியாய்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:43-44.  

43  அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

44  அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.

கிறித்துவில் வாழ்வு:  

கூர்மை ஆயுதம் குத்தும்போது,    

குருதி எவ்விதம் வடிந்திடுமோ,  

வேர்வை சிந்தி வேண்டியபோது, 

வேந்தனில் அவ்விதம் படிந்ததுவே.  

நேர்மை போதும் என்கிறபோது,  

நிகழும் துன்பம் வருத்திடுமோ?  

ஆர்வமாக வேண்டுதல் செய்வீர்;  

ஆண்டவர் அருளும் பெருத்திடுமே!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply