பாதையில் விழுந்த விதைகள்!

பாதையில் விழுந்த விதைகள்!
கிறித்துவின் வாக்கு:லூக்கா 8:11-12.
11 அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
12 வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.

கிறித்துவில் வாழ்வு:
தூதின் நறுமணம் ஏற்காதவர்தான்,
தூய்மை நேர்மை வெறுக்கின்றார்.
காதில் விழுந்த இறைவன் வாக்கைக்
கருத்தில் கொள்ள மறுக்கின்றார்.
தீதில் அமிழும் நெஞ்சத்தார்தான்,
தீவிரம் வாழ்வை அறுக்கின்றார்.
பாதைவழியில் விழுந்த வித்தாய்,
பறவை உண்ணப் பறக்கின்றார்!
ஆமென்.

Image may contain: bird

உவமைகளில் இறையரசு!

உவமைகளில் இறையரசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:9-10.
9 அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.

10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

கிறித்துவில் வாழ்வு:
மறைந்திருப்பதுதான் மறைபொருளாகும்.
மானிடருக்கு மறைவாய் இருக்கும்.
திறந்தளிப்பதுதான் இறையருளாகும்.
தெளிவும்கூட நிறைவாய் இருக்கும்.
இறந்தவர் அமைப்பது மண்ணரசாகும்.
இங்கு யாவுமே அவமாயிருக்கும்.
நிறைந்த வாழ்வோ விண்ணரசாகும்.
நீங்கள் கற்க, உவமையாயிருக்கும்!
ஆமென்.

Image may contain: text
Like

பாகுபாடு பாரா இறைவன்!

பாகுபாடு பாரா இறைவன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:4-8.
4 சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது, அவர் உவமையாகச் சொன்னது:
5 விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்துமிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
6 சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
7 சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
8 சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.

கிறித்துவில் வாழ்வு:
வெவ்வேறு நிலங்கள் பார்க்கச் சென்றோம்.
விரும்பாதவற்றை வேண்டாம் என்றோம்.
இவ்வாறு சிலபேர் செய்திட நின்றோம்;
இறையோ எங்கும் விதைப்பது கண்டோம்.
ஒவ்வோர் ஆளும் ஒவ்வொரு நிலமாம்.
ஒதுக்கி வைத்தல் இறையில் இலையாம்.
செவ்வனே விதைக்கச் செல்கிறார் வலமாம்;
செய்திப்படி நாம் செய்வதே நலமாம்!
ஆமென்.

Image may contain: one or more people, people standing, outdoor and nature
Like

இறைப்பணியில் பெண்கள்!

இறைப்பணியில் பெண்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:2-3.
2 அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
3 ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
எந்த பணியை யாருக்கென்று,
இறைமகன் அறிந்து பணி கொடுத்தார்.
அந்த வகையில் ஆணுக்கிணையாய்
அன்னையர் கன்னியர் பணி எடுத்தார்.
இந்த நாளிலும் இயேசுவின் வழியில்,
இறைப்பணி பெண்கள் செய்கின்றார்.
சொந்த நலனைத் துறந்து ஆற்றும்,
தூயருக்கிரங்குவோர் உய்கின்றார்!
ஆமென்.

Image may contain: 3 people, baby
Comments

இறைவாக்கு கேட்பீரே!

இறைவாக்கு கேட்பீரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:1.
1 பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அடியாரே, அடியாரே,
அன்பு மொழி கேட்பீரே!
பொடியாகும் பூவுலகைப்
பொய்யினின்று மீட்பீரே.
தடியாலும் வாளாலும்,
தவறி விட்டார் நாட்டாரே.
மடியாமல் இவர் வாழ,
மறையறிவு கொட்டீரே!
ஆமென்.

Image may contain: text

உங்கள் பற்றுறுதி உங்களை மீட்கும்!

உங்கள் பற்றுறுதி உங்களை மீட்கும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7: 47-50.
47 ஆதலால் நான் எனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்ற சொல்லி;
48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
49 அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார்? என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
50 அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பற்றுறுதி கொண்டவரின்
பாவமெல்லாம் ஒழியும்.
பெற்றுவரும் நன்மையினால்,
பேரன்பைப் பொழியும்.
கற்றறிந்த இறையறிவைக்
காண்பவர்க்கு மொழியும்.
சுற்றுமுள்ளோர் மீட்புறுவார்;
திறந்ததுவே வழியும்!
ஆமென்.

Image may contain: 1 person

விருந்து கொடுப்பார் உள்ளம்!

விருந்து கொடுப்பார் உள்ளம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:43-46.

43 சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,
44 ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என்கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
45 நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
46 நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ, என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.

கிறித்துவில் வாழ்வு:
விருந்து கொடுப்பார் நெஞ்சத்தை,
விண்ணின் அரசர் புரிந்துள்ளார்.
இருந்து போங்கள் என்பாருள்,
இருக்கும் நஞ்சும் அறிந்துள்ளார்.
திருந்துவாரின் செயல்பாட்டைத்
தெரிந்து தெய்வம் அழைத்துள்ளார்.
அருந்துவோம் நாம் அவரன்பை;
அழைப்பை ஏற்றார் தழைத்துள்ளார்!
ஆமென்.

Image may contain: people sitting, table and indoor

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

மின்னலைப் போன்று மிளிர்ந்து மறையும்,
மேதினி வாழ்வை ருசிக்கும் நாம்,
இன்னொரு ஆண்டை இனிதாய்ப் பெறுதல்,
இறைவன் கொண்ட இரக்கமாம்.
நன்மையை விதைத்து நன்மையை அறுக்கும்,
நல்லோர் உலகை விரும்பும் நாம்,
என் செய்தோமென எண்ணி உழைப்பின்,
இனியும் வாழ்வைப் பெருக்குமாம்!

-கெர்சோம் செல்லையா.

எண்ணிலடங்கா என் பாவம்!

எண்ணிலடங்கா என் பாவம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:40-42.
40 இயேசு அவளை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
41 அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
42 கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பண்ணும்போது தீமையென்று,
பாவி எனக்குப் புரியவில்லை.
எண்ணும்போது எண்ணிக்கையும்
எத்தனையென்று தெரியவில்லை.
மண்ணாய் நானும் அழியாதிருக்க,
மாபெரும் அன்பைப் பொழிபவரே,
விண்ணை எட்டும் மன்னிப்பருளை,
விழுந்து பணிந்து மொழிவேனே!
ஆமென்.

Image may contain: sky, outdoor and text

பரிவின் பார்வை!

பரிவின் பார்வை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:36-39.
36 பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.
37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து,
38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

கிறித்துவில் வாழ்வு:
கண்ணில் காணும் இழிவு நீங்க,
கடிந்து கொண்டால் சென்றிடுமோ?.
புண்ணைப் பார்த்து, முகம் சுளித்தால்,
புரையோடிடுதல் குன்றிடுமோ?
பண்ணும் பாவம் விட்டு ஒழிக்க,
பரிந்து அணைத்தால் நின்றிடுமே.
எண்ணை மருந்தாய் நாமிருப்போம்;
இயேசு வழியில் வென்றிடுமே!
ஆமென்.

Image may contain: text